நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை

naan virumbum nool katturai tamil

இந்த பதிவில் “நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை” பதிவை காணலாம்.

உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர் திருவள்ளுவராவார்.

நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திருவள்ளுவர்
  3. திருக்குறள் நூல் அமைப்பு
  4. திருக்குறளின் சிறப்புகள்
  5. மொழிபெயர்ப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் எண்ணிலடங்கா நூல்கள் படைக்கப்பட்டுள்ள போதும், எல்லா நூல்களும் நிலைத்து நிற்பவை அல்ல. அது போல் எல்லா நூல்களையும் படித்து முடிக்க முடிவதில்லை.

பல சிறப்பு மிக்க நூல்கள் படைக்கப்பட்டு இருந்த போதிலும் அவற்றுள் நான் விரும்பும் நூல் திருக்குறள் ஆகும். பழமையும், பெருமையும் வாய்ந்த திருக்குறள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

திருவள்ளுவர்

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகின்ற திருக்குறளை நமக்கு அளித்தவர் திருவள்ளுவர் ஆவார். திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை.

எனினும் ஆதி, பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். இவர் கிமு 31ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப்புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் போன்ற பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர் திருவள்ளுவராவார்.

திருக்குறள் நூல் அமைப்பு

திருக்குறள் நூலானது வெண்பாவால் எழுதப்பட்டது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உட் பிரிவுகளை உடையது. அவை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று அழைக்கப்படுகின்றன.

133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு 10 குறள்களாக 1,330 குறள்களையும் கொண்டுள்ளது. இத்தகைய திருக்குறளின் நூல் அமைப்பானது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளானது பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் தமிழ், கடவுள் என்பவையாகும், திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது ஆகும்.

மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல் திருக்குறளாகும்.

உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்றாகும். உலகப் பொதுமறை நூல் என்ற சிறப்பு திருக்குறளையே சாரும்.

மொழி பெயர்ப்புகள்

திருக்குறளின் சிறப்புத் தன்மையையும், திருக்குறளின் பொதுத் தன்மையையும், அறிந்த இத்தாலி நாட்டுக் கிறித்துவப் பாதிரியாரான ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர் முதன் முதலில் கி.பி. 1730 ஆம் ஆண்டிலேயே இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார்.

ஆசிய மொழிகள், ஐரோப்பிய மொழிகளிலும், மற்றும் பிற இந்திய மொழிகளிலும், திருக்குறளை மொழி பெயர்த்தனர். இந்திய மொழிகளில் ஏறத்தாள 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

முடிவுரை

இரண்டு அடிகளில் அற்புதமான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதனை திருக்குறள் நமக்கு உணர்த்துகின்றது. மனிதன் வாழ்வியலுக்கு தேவையான பல அறக் கருத்துக்களை திருக்குறள் வெளிப்படுத்துவதால் இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

வாழ்வியல் நூல் என்று கருதப்படும் திருக்குறளில் “உயர் அறிவியல்” பொதிந்து கிடப்பது உண்மையில் என்னை கவர்கின்றது. திருக்குறளின் அறக்கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வில் வளம்பெறுவோமாக.

You May Also Like:
புத்தகம் பற்றிய கட்டுரை
காந்தியின் அகிம்சை கட்டுரை