புத்தகம் என் நண்பன் கட்டுரை

puthagam en nanban katturai in tamil

கற்பனைத் திறனையும், அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் வகையில் தரமான புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும்.

புத்தகம் என் நண்பன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நமது கற்பனை திறன்
  3. வளர்ச்சிக்கு வழிகாட்டி
  4. நிலையான நண்பன்
  5. வற்றாத நீர்
  6. முடிவுரை

முன்னுரை

வரலாற்றில் புகழ்பெற்றவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் நிற்பவை புத்தகங்கள். தொட்டு தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும்.

“புத்தகங்களை நேசி ஒரு புத்தகத்தை தொடுகின்ற போது நீ ஒரு அனுபவத்தை பெறுவாய்.” என்கின்றார் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துக்குமார் அவர்கள். புத்தங்களே வாழ்வில் சிறந்த நண்பர்கள் ஆகின்றன.

நமது கற்பனை திறன்

மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க ஒவ்வொருவரது வீட்டிலும், ஓர் நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் கூறியுள்ளார்.

புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்து பார்த்து நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது.

நாம் வரலாறு, கலாச்சாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற நல்ல புத்தகங்களை படித்து, கற்றுத் தேர்ந்தால் தான் சமுதாயத்தில் அறிவில் சிறந்தவர்களாக முடியும்.

வளர்ச்சிக்கு வழிகாட்டி

கற்பனைத் திறனையும், அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் வகையில் தரமான புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும். மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்து தெரிந்து கொள்ளும் போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

தங்களது பெற்றோர் நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை பார்த்தால், பிள்ளைகளுக்கும் தாமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வரும்.

அப்படி படித்த புத்தகங்களைப் பற்றி பெற்றோர் பிள்ளைகளிடம் விவாதிக்கும் பொழுது, அவர்களுக்கு புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் உருவாகும். நல்ல புத்தகங்களை படிப்பது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும்.

நிலையான நண்பன்

நாம் தினமும் அரைமணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான நண்பனாக விளங்கும் புதிர்கள்தான் என விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியைச் கொடுத்த தாம். அதற்கு விடை தேடி இத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான்.

வற்றாத நீர்

படிக்கும் இடத்தை விட படிக்கும் போது மனம் தெளிவாகக் குழப்பமின்றி இருப்பதே முக்கியம். படித்த விடயங்களை அடிக்கடி மனத்திரையில் விடுவது நல்லது.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தருக்கு கற்றனைத்து ஊறும் அறிவு” என்றார் வள்ளுவர். அதாவது மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் மீண்டும் மீண்டும் அதன் அளவுக்கு ஏற்பச் சுரக்கும் அதுபோல கற்ற கல்வியின் அளவுக்கும் கற்ற நூலின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.

அப்படிப்பட்ட அள்ள அள்ளக் குறையாத, வற்றாத வளமாக என்றும் இருப்பது புத்தகங்கள் தான், அமைதியான பொறுமையான அறிவார்ந்த மற்றும் வளமான சமுதாயம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்பதும் புத்தகங்கள் தான்.

எனவே வளமான வாழ்க்கைக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

முடிவுரை

பல புத்தகங்களை படித்து அறிவை வளர்ப்பதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் நல்ல புத்தகங்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் என்றென்றும் உங்களுக்கு உற்ற நண்பனாக திகழும். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கின்றார் அவ்வையார். இதற்கிணங்க நல்ல புத்தகங்களைப் படித்து வாழ்வில் வளம் பெறுவோமாக.!

You May Also Like:

வாசிப்பின் பயன்கள் கட்டுரை

புத்தகம் பற்றிய கட்டுரை