மின்சாரத்தின் பயன்கள் கட்டுரை

Minsarathin Payangal Katturai In Tamil

இந்த பதிவில் மனித வாழ்வோடு இரண்டற கலந்த “மின்சாரத்தின் பயன்கள் கட்டுரை“பற்றி பார்க்கலாம்.

இன்று மனிதனின் அதிகப்படியான மின்சார பாவனையினால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

மின்சாரத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மின்சாரத்தின் நன்மைகள்
  3. மின்சாரத்தின் தீமைகள்
  4. மின்சார சேமிப்பு
  5. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகும். மின்சாரம் இன்றி உலகம் இயங்க முடியாத அளவிற்கு மின்சாரம் மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்டது.

வீடு முதல் நாடு வரை அனைத்தின் இயக்கத்திற்கும் மின்சாரம் இன்றியமையாததாக மாறியுள்ளது. மின்சாரத்தின் மூலம் மக்கள் அடையும் பயனானது எண்ணிலடங்காதவை ஆகும். மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம்.

என்றாலும், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம். இக்கட்டுரையில் மின்சாரத்தின் பயன்கள் பற்றி நோக்கலாம்.

மின்சாரத்தின் நன்மைகள்

  • மின்சார உபகரணங்கள் உட்பட இயந்திரங்களின் செயல்பாடுகளுக்கு மின்சாரம் பயன்படுகின்றது.
  • மின்சாரம் மின் விளக்குகளில் பாய்ந்து ஒளியைத் தருகிறது.
  • மின் விசிறிகளை இயக்கிக் காற்றை வீசுகிறது.
  • போக்குவரத்துத் துறையில் தொடர் வண்டிகளை இயக்குகின்றது.
  • மருத்துவத் துறையில் நோயை கண்டறியவும், அறுவைச் சிகிச்சை செய்யவும் மின்சாரம் பயன்படுகிறது.
  • அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவுகிறது.
  • வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பான், ஒளி நகல் கருவி, ஆகிய கருவிகளை இயக்க மின்சாரம் உதவுகிறது.

மின்சாரத்தின் தீமைகள்

மின்சாரத்தை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையேல் மின்சாரம் தாக்கி உயிர் இழக்க நேரிடும்.

சூழல் மாசடைவு ஏற்படுகின்றது. குறிப்பாக அனல்மின் நிலையங்களில் முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யாததால் மாசடைவு ஏற்படுகின்றது.

மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசி, துகள்கள் காற்றுடன் கலக்கும்போது, மக்கள் சுவாச நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. மேலும் மின் வாகனங்கள் போன்றவற்றாலும் சூழல் மாசடைகின்றது.

மின்சார சேமிப்பு

மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரி அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விடயம். இதனால் மின் சேமிப்பு என்பது அவசியமாகியுள்ளது.

மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் நாட்டின் மின் சேமிப்புக்கு நாமும் உதவலாம். சிறு அளவில் மேற்கொள்ளும் சேமிப்பும் ஒரு நாட்டுக்குப் பெருமளவில் உதவும்.

மின் சாதனங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் போதும் நாட்டின் சேமிப்புக்கு நாமும் கை கொடுக்கலாம்.

மின்னாற்றலை வீணாக்குவது நல்லதல்ல என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். இயன்றவரை இயற்கை காற்றையும் ஒளியையும் பயன்படுத்த வேண்டும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள்

மனிதனின் அதிகப்படியான மின்சார பாவனையினால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது தேவையான ஒன்று.

வீடுகளில் எல்.ஈ.டி. பல்புகளை பயன்படுத்தும் போது மின்சாரம் சேமிக்கப்படும். தேவையற்ற நேரத்தில் கணினி, லேப்டாப் போன்றவற்றை முழுவதுமாக ஆஃப் செய்தல் வேண்டும்.

குறைந்த எடையுடைய அதிக மின் திறன் கொண்ட மின்விசிறிகளை உபயோகிக்கலாம். துணிகளை தினமும் அயர்ன் செய்யாமல் மொத்தமாக அயர்ன் செய்ய வேண்டும். இதனால் மின்சாராச் செலவு கணிசமாகக் குறையும்.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. மின்சாரம் மனிதனுக்கு பலவகைகளிலும் பயன்படுவதால் அதன் பாவனை மென்மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதனால் மின்சார சிக்கனம் என்பது அவசியமானதாக மாறிவிட்டது. மின் சிக்கனத்தைக் கடைப்பிடித்து மக்கள் உயர்வுக்கும், நாட்டு முன்னேற்றத்துக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

You May Also Like:
மின் சிக்கனம் கட்டுரை
மின்சாரம் பற்றிய கட்டுரை