சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

Sutru Sulal Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைக்கு உலகநாடுகள் இயற்கை சூழல் அழிவதினால் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரத் துவங்கியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சூழலும் பூமியின் இயக்கமும்
  3. சூழலின் முக்கியத்துவம்
  4. சூழல் மாசடைதலும் அதனால் உருவாகும் பிரச்சினைகள்
  5. சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழ்கின்ற சூழலை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. நல்ல சூழல் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. அதே சமயம் மாசடைந்த சூழல் மனிதனை நோயாளியாகவும் மன அழுத்தம் மிக்கவனாகவும் மாற்றுகிறது.

மனிதன் தான் வாழும் சூழலை பாதுகாத்து வாழும் போது அச்சூழல் அழகாவதோடு அவனுடைய வாழ்க்கையும் அழகாக இருக்கும்.

இயற்கையின் படைப்பு அவ்வளவு அழகானது. இவற்றை காப்பது எம் தலையாய கடமையாகும். இக்கட்டுரையில் சுற்றுசூழல் பாதுகாப்புப் பற்றி பார்ப்போம்.

சூழலும் பூமியின் இயக்கமும்

நாம் வாழும் பூமி இன்றைக்கு 400 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியதாக சொல்லப்படுகிறது. பால்வெளியில் ஏற்பட்ட பெரு வெடிப்பினால் பூமி போன்ற பல கோள்கள் உருவாகியதாக சொல்லப்படுகிறது.

நீர், காற்று, ஆகாயம், நிலம், தீ என்ற பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது இப்பூமியாகும். இங்கு காடுகள், பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள், மலைகள், சமுத்திரங்கள், பயிர்நிலங்கள் என பலவகையான சூழல்கள் காணப்படுகின்றன.

தரைச்சூழல் மனிதர்கள் வாழவும் தாவரங்கள் வளரவும் ஆதாரமாய் உள்ளது. காட்டுச்சூழல் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் வாழ்விடமாய் உள்ளது.

காடுகள் சுவாசிக்க ஒட்சிசனையும் வளிமண்டலத்திற்கு நீராவியையும் தந்து மழையையும் தருகிறது. சமுத்திர சூழல் பலகோடி உயிரினங்களின் வாழ்விடம் இப்பூமியின் வெப்பத்தை குறைக்கும்.

இச்சூழல் சரியாக இயங்குவதினால் தான் நீரியல் வட்டம், உணவு வட்டம், காபன் வட்டம் என பல சூழல் சமநிலை செயற்பாடுகள் சீராக இயங்கி கொண்டிருக்கின்றன. பூமியில் இடம்பெறும் ஒவ்வொரு இயக்கமும் இவ்வியற்கை சூழலை சார்ந்தே இடம்பெறும்.

சூழலின் முக்கியத்துவம்

சூரியன் மிகப்பெரிய சக்தி முதல். இதன் மோசமான வெப்பக்கதிர்களில் இருந்து வளிமண்டலம் எம்மை பாதுகாக்கிறது. இங்குள்ள ஓசோன் படை தீய கதிர்வீச்சுக்களில் இருந்து பூமியை பாதுகாக்கின்றது.

அதனையும் தாண்டி வரும் கடும் வெப்பத்தை சமுத்திரங்கள் தடுக்கின்றன. காற்றுக்களை தரையை நோக்கி வீச செய்வதனால் பூமி பாலைவனமாகவும் பனிகாடாகவோ மாறாமல் சமுத்திரங்கள் பாதுகாக்கின்றன.

நாம் உண்ண உணவையும், உடுத்த உடையும், இருக்க வீடும், சுவாசிக்க காற்றும் இச்சூழலே தருகின்றது. மரங்கள் இல்லாத பாலைவனங்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் இயற்கை சூழலின் முக்கியத்துவம் புலனாகும்.

சூழல் ஏன் முக்கியமானது என்று கேட்டால் ஒரு போர்வீரனை அவனது கவசம் எவ்வாறு காக்கின்றதோ அது போல எம்மையும் இவ்வுலகத்தையும் இயற்கை சூழல் பாதுகாக்கிறது. மனித வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமாயின் சூழல் மிகவும் அவசியமானதாகும்.

சூழல் மாசடைதலும் அதனால் உருவாகும் பிரச்சினைகளும்

இன்றைக்கு மனிதர்கள் எல்லா துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டுள்ளனர். இந்த நாகரீக வளர்ச்சி சூழலை மாசடைய செய்து வருவதனால் ஏற்படும் அபாயங்களை யாரும் உணர்வதாய் இல்லை.

அதிகரித்து வரும் நகரமயமாக்கம் காரணமாக இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் சனத்தொகையால் வாழ்விடங்களை அமைப்பதற்காக இயற்கை சூழல் அழிக்கப்பட்டு வருகிறது.

வாகனங்களின் அதிகரிப்பால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயு அதிகமாகி வளி மாசடைந்து வருகிறது. முறையற்ற விவசாய நடவடிக்கைகளால் மண் மாசடைகிறது.

பிளாஸ்ரிக் போன்ற நஞ்சு உலோகங்கள் மண்ணை மாசுபடுத்துகின்றன. காடுகளையும் கண்டல் தாவரங்களையும் அழிப்பதனால் நீர் உவராகிறது.

அசேதன கழிவுகளும் குப்பைகளும் நீரை மாசடைய செய்கின்றன. இன்றைக்கு இயற்கை சூழல் மிக மோசமாக மாசடைவதனால் அது மனிதர்களது வாழ்வை பாதிக்க துவங்கி விட்டது.

உணவு நஞ்சாகி விட்டது. காற்று மாசடைந்து விட்டது. இன்றைக்கு பாலைவனமாதல், பூகோள வெப்பமாதல், ஓசோன் சிதைவடைதல் காலநிலைமாற்றம் போன்ற நிலைமைகள் ஏற்பட முக்கிய காரணம் சூழல் மாசடைதலே ஆகும்.

சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள்

இன்றைக்கு உலகநாடுகள் இயற்கை சூழல் அழிவதினால் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரத் துவங்கியுள்ளன.

இயற்கையை மனிதன் பாதுகாக்காமல் போனால் மனித குலம் அழியும் நிலையானது உருவாகி விடும் என ஐக்கிய நாடுகளினுடைய சூழல் பாதுகாப்பு நிதியம் தெரிவிக்கின்றது.

சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு சூழல்சார் பிரகடனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அபாய நிலையில் உள்ள பூமியை காக்க விழிப்புணர்வை ஏற்படுத்த ஜுன் 5 சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

முடிவுரை

நாளுக்கு நாள் வெப்பம் உயர்கிறது. காலநிலை தன்மைகள் மாறி வருகிறது. இயற்கையின் சீற்றம் அனர்த்தங்களாக வெளிப்படுகின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

பூமியில் வாழ்வதே பெரும் சவாலாக மாறி வருகிறது. எம்முடைய முட்டாள் தனமான சூழலுக்கு எதிரான செயற்பாடுகள் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது போல் சூழலை மாசடைய செய்ததன் தாக்கத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்கிறோம்.

இந்த நிலைமை மாற வேண்டுமாயின் மனிதர்கள் மாற வேண்டும் சூழலை பாதுகாக்க வேண்டும்.

You May Also Like:
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு