போதை பழக்கத்தின் தீமைகள் கட்டுரை

pothai palakkam theemaigal katturai in tamil

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகவே போதைப் பழக்கம் காணப்படுகின்றது. இன்று சிறு பிள்ளை முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆட்கொண்டு வரும் ஒரு பழக்கமாகவே போதைப் பழக்கம் அமைந்துள்ளது. இன்று இது எம் சமூகத்தை அழிவுக்கிட்டுச்செல்லும் பாதைக்கு வழியமைத்து செல்கின்றது.

போதை பழக்கத்தின் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • போதைப் பழக்கத்தின் தீமைகள்
  • உடல் நலத்தை பாதிக்கும் போதைப் பழக்கம்
  • இன்றைய இளைஞர்களும் போதையும்
  • போதைப் பாவனையை தடுப்பதற்கான வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

இன்று போதைப் பாவனையில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் அடிமையாகி வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது குற்றங்களும் நிகழ்கின்றன.

இன்று போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்க்கையை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இக்கட்டுரையில் போதைப் பழக்கத்தின் தீமைகள் பற்றி நோக்கலாம்.

போதைப் பழக்கத்தின் தீமைகள்

உலகையே அழிவிற்குட்படுத்தும் பாவனையாக போதைப் பாவனையானது காணப்படுகின்றது. போதைப் பாவனையின் மூலமாக பல்வேறு தீங்குகள் நிகழ்கின்றன. அந்த வகையில் போதைப் பழக்கத்தின் காரணமாக பல்வேறு உடலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மேலும் புற்றுநோய், இரத்த அழுத்தம் என பல நோய்கள் எம்மை தாக்குகின்றன. இன்று அதிகரித்து வரும் தற்கொலைக்கு பிரதானமான காரணமாக போதைப் பழக்கமே திகழ்கின்றதோடு பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளை என பல்வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இன்று உயிரை பருகும் ஓர் உயிர்கொல்லியாகவும் போதைப்பாவனை அமைந்துள்ளது.

உடல் நலத்தை பாதிக்கும் போதைப் பழக்கம்

உடல் நலத்தை பாதிக்கும் ஒரு விடயமாக போதைப் பழக்கம் காணப்படுகின்றது. அதாவது போதைப் பொருட்களில் உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் வேதிப் பொருள் காணப்படுகின்றது. இது அருந்துபவரின் உடலில் கலப்பதன் காரணமாக நோயாளியாக மாறுகின்றார்.

போதைப் பாவனையான மது பாவனையை அதிகமாக அருந்துவதன் காரணமாக பசி ஏற்படாது. இதனால் வயிற்றுப்புண், உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மேலும் சிறுநீரக நோய்கள், இதயம் சார்ந்த பிரச்சினைகள் என எமது உடலை அழிக்கின்றதொன்றாகவே போதைப் பழக்கம் காணப்படுகின்றது.

இன்றைய இளைஞர்களும் போதையும்

இளைஞர்களின் வாழ்வை பாதிக்கும் பழக்கமாகவே போதைப் பழக்கம் திகழ்கின்றது. அதாவது நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிடும் இளைஞர்கள் தன் வாழ்க்கையையே போதைப் பழக்கத்தினால் அழிவுக்குட்படுத்தி வருகின்றனர்.

இன்று இதனை அடிப்படையாக வைத்தே பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றதோடு போதைப் பழக்கத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்களாகவே இளைஞர்கள் காணப்படுகின்றனர்.

இளைஞர்களாகியவர்கள் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமே எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். இன்று போதைக்கு அடிமைப்பட்ட பல இளைஞர்கள் பெற்றோரை மதிக்காது செயற்படுகின்றனர்.

இத்தகைய நிலையை மாற்றுவதோடு நின்றுவிடாமல் எம்முடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நின்ற எம் பெற்றோரை மதித்து நடப்பது எம் கடமையாகும்.

போதைப் பாவனையை தடுப்பதற்கான வழிகள்

போதைப் பாவனையை தடுப்பதன் மூலமாகவே எமது நாட்டை வளமான நாடாக மாற்ற முடியும். அதாவது முதலில் போதைப் பொருட்களை விற்பவர்களுக்கெதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

பிள்ளைகளை பெற்றோர்கள் எப்பொழுதும் கண்காணித்து வருவதோடு போதைப் பொருள் பாவனையின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறாக மேற்கொள்ளப்படுவதன் மூலமாக போதைப் பாவனையை தடுக்க முடியும்.

முடிவுரை

எம்மை அழிக்கும் போதையை நாம் ஒழிப்போம் என்ற நோக்கில் போதையை தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு வித்திட போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்.

போதையின் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து போதைப் பாவனையை அடியோடு அழிக்க முயற்சி செய்வோம்.

You May Also Like:

போதை அழிவின் பாதை கட்டுரை

போதைப்பொருள் பாவனை கட்டுரை