போலியோ என்பது ஒரு வகை நோய் ஆகும். இது “இளம்பிள்ளை வாதம்” எனவும் அழைக்கப்படுகிறது. இந்நோயானது போலியோ எனும் வைரஸின் தாக்கத்தின் காரணமாக உடலின் இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழக்கும் நிலையாகும்.
இது பிறந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. சில வருடங்களுக்கு முதல் உலகையே ஆட்சி செய்த நோய்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகிறது.
பின்னர் இதற்கான போலியோ தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து என்பன கண்டுபிடிக்கப்பட்டு இந்நோயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
2020, 2021 ஆம் ஆண்டுகளில் ஆய்வில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் மாத்திரமே இன்னும் போலியோ காணப்படுகிறது. மற்றைய அனைத்து நாடுகளிலும் போலியோ அழிக்கப்பட்டு விட்டது.
தோற்றம்
பத்து வருடங்களுக்கு முதல் போலியோ நோயானது உலகெங்கும் பரவிய தருணத்தில், இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
அவ்வேளையில், அமெரிக்காவின் பாரிய நிதி உதவியுடன் 1952இல் “ஜோனஸ் சால்க்” எனும் அமெரிக்க மருத்துவர் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்தார்.
இதனை இவர் போலியோ கிருமியின் மூன்று துணை இனங்களை கொண்டு அவற்றை வீரியம் இழக்கச் செய்து குரங்கின் சிறுநீரக திசுக்களையும் பயன்படுத்தி கண்டுபிடித்தார்.
இவரது காலத்தில் உயிருள்ள காரணிகளை வைத்து தான் தடுப்பூசி கண்டறியும் முறை நடைமுறையில் காணப்பட்டது. இதனால் பரிசோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் 6 குழந்தைகள் இறந்து விட்டன. மூன்று குழந்தைகளுக்கு போலியோ வந்து கால்கள் பாதிக்கப்பட்டது.
எனவே, பரிசோதனைக்கு நோயாளிகள் கிடைப்பது கடினமாக காணப்பட்டமையினால் தான் கண்டறிந்த மருந்தை தனது மனைவிக்கும் குழந்தைக்கும் முதலில் போட்டுக்கொண்டார்.
இதனால் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு 161 குழந்தைகள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். இதனால் இவர்களுடைய இரத்தத்தில் போலியோவை எதிர்க்கும் எதிரணுக்கள் உற்பத்தியாவதை நிரூபித்தார்.
இதன் விளைவாக மருத்துவ உலகம் இந்த மருந்தை ஏற்றுக்கொண்டது. உலகம் முழுவதும் இம்மருந்து விநியோகிக்கப்பட்டு போலியோ நோயின் தாக்கம் குறைக்கப்பட்டது.
சால்க், தான் கண்டுபிடித்த உயிர்காக்கும் தடுப்பூசிக்கு, காப்புரிமை வேண்டாம் என மறுத்துவிட்டார்.எனது கண்டுபிடிப்பு, சூரியனுக்கு ஒப்பானது. அனைவருக்கும் பயனளிக்க வேண்டியது. சூரியனுக்கு காப்புரிமை கேட்க முடியுமா என்று, அதை மறுத்தவர் சால்க்.
1957இல் “ஆல்பட் சாபின்” எனும் மற்றுமொரு அமெரிக்க மருத்துவர் போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கண்டுபிடித்தார். உயிருள்ள வீரியம் குறைந்த போலியோ கருவியை பயன்படுத்தி இம்மருந்தை தயாரித்தார்.
இந்த மருந்தையே ரஷ்யா, சிங்கப்பூர், மெக்சிகோ ஆகிய நாடுகளில் வாழும் ஒரு கோடி மக்களுக்கு கொடுத்து பரிசோதித்தனர். இந்த மருந்தானது எல்லோருக்கும் நல்ல பலனை கொடுத்தது.
போலியோ தடுப்பூசி உடலில் உள்ள போலியோ கிருமியை எதிர்த்தாலும் குடலில் உள்ள போலியோ கிருமிகள் அழிவடையாமல் காணப்பட்டது. ஆனால் இந்தப் போலியோ சொட்டு மருந்து குடலில் உள்ள போலியோ கிருமியையும் அழிவடைய செய்கிறது.
போலியோ தடுப்பூசியை விட போலியோ சொட்டு மருந்து சக்தி வாய்ந்ததாகவும் செலவு குறைந்ததாகவும் காணப்படுகின்றது. இதனால் அதிகப்படியான நாடுகள் அதிக அளவில் போலியோ சொட்டு மருந்தை உபயோகிக்கின்றன.
போலியோ பரவும் விதம்
போலியோவானது காற்றின் மூலம் பரவும் வைரஸ் ஆகும். இது சுவாசத்தின் மூலம் எமது உடலில் உட்சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.
போலியோவின் தாக்கம்
சுவாசத்தின் மூலம் உடலினுள் புகும் போலியோவானது, எமது உடலில் உள்ள நரம்பு மண்டலங்களை பாதிப்படைய செய்கிறது. கால் நரம்புகளை பாதிப்படையச் செய்வதனால் சில குழந்தைகள் நடக்க இயலாமல் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு உடலில் பாரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் குறைந்த அளவிலேயே இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கின்றனர். அரிதாகவே சில சந்தர்ப்பங்களில் சுவாச நரம்புகளை பாதிப்படையச் செய்து குழந்தைகள் மூச்சு எடுக்க இயலாமல் திணறி உயிரிழக்கின்றனர்.
இந்தியாவில் போலியோ
இந்திய அரசாங்கம் ஒரு வயது முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் போலியோ மருந்து வழங்குகிறது.
2011 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் முற்று முழுதாக போலியோ இல்லாமல் செய்யப்பட்டு போலியோ அற்ற நாடு என சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏனைய அயல்நாடுகளில் போலியோ இன்னும் ஒழிக்கபடாமையால் அங்கிருந்து பரவும் அபாயம் இந்தியாவுக்கு காணப்படுகின்றமையால் இன்றும் இலவசமாக இந்திய அரசாங்கத்தால் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
You May Also Like: |
---|
உ.வே.சாமிநாதய்யர் வரலாறு |
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை |