மூலிகையின் பயன்கள் கட்டுரை

mooligaiyin payangal katturai in tamil

உலகில் எண்ணிலடங்காத மூலிகைகள் காணப்படுவதோடு மூலிகையின் பயன்பாடுகள் அளப்பரியதாகவே காணப்படுகின்றன.

மூலிகைகளானவை தன்னகத்தே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டமைந்ததாக திகழ்வதோடு பல்வேறு கொடிய நோய்களுக்கான சிறந்த மருந்தாகவும் மூலிகைகளே காணப்படுகின்றன.

மூலிகையின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும்
  • மருத்துவ குணமிக்க மூலிகைகள்
  • இதய ஆரோக்கியத்தில் மூலிகைகளின் பங்கு
  • புற்று நோயை எதிர்த்தல்
  • முடிவுரை

முன்னுரை

எமது உடல் ஆரோக்கியத்தில் பிரதான பங்கினை வகிப்பதே மூலிகைகள் ஆகும். இத்தகைய மூலிகைகளே இன்று பல்வேறு நோய்களிலிருந்து எம்மை காக்கின்றது.

மூலிகையின் ஊடாகவே எம்மை கொடிய வைரஸ்களின் செயற்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும்

இன்று பல்வேறுபட்ட காரணங்களால் எமது உடல் நிலையானது பாதிப்பிற்குட்பட்டு வருகின்றது.

எம்மை இத்தகைய நோயிலிருந்து பாதுகாப்பதற்கே நோயெதிர்ப்பு சக்தியானது அவசியமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை பின்வருமாறு நோக்கலாம்.

துளசி: துளசிச் செடியானது சிறந்ததொரு பயனளிக்கக் கூடியதொரு மூலிகையாகும். இது சிறந்த நோயெதிர்ப்பு மூலிகையாகவும், இருமல், மன அழுத்தம், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து எம்மை காக்கவும் உதவுகிறது.

நெல்லிக்காய்: நெல்லிக்காயானது எம்மை மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது.

புதினா: இம் மூலிகைச் செடியானது ஒவ்வாமைக்கு எதிராக தொழிற்படக் கூடியதாகும். மேலும் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பக்டீரியாக்களுக்கு எதிராக செயற்படக் கூடியதொரு மூலிகையாகும்.

முருங்கை: மிகவும் சக்தி வாய்ந்ததொரு நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதே முருங்கை ஆகும். இது எமது உடலிற்கு அவசியமான விற்றமின் சி சத்தினை வழங்கக் கூடியதாகும்.

மருத்துவக் குணமிக்க மூலிகைகள்

மருத்துவத் துறையில் மூலிகைகளின் பயன்களானவை எண்ணிலடங்காதவைகளாகும். அந்த வகையில்,

அருகம்புல்: அருகம்புல்லானது மருத்துவக் குணமுள்ளதொரு மூலிகையாகும். இது அனைத்து நோய்களுக்குமான ஓர் நோய் நிவாரணியாகும். இரத்தப் புற்று நோய், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றை இதனூடாக குணப்படுத்த முடியும்.

கறிவேப்பிலை: உடல் சூட்டை அகற்றி, ஈரல் கோளாறுகள் மற்றும் பித்தத்தால் ஏற்படும் பைத்தியத்தை குணப்படுத்தும் மருத்துவமிக்கதே கறிவேப்பிலையாகும்.

வல்லாரை: இது அல்சர், யானைக்கால், தொழு நோய், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றை குணப்படுத்தக் கூடியதாகும். அதே போன்று தோல் வியாதிக்கான சிறந்ததொரு மருந்தாக தூதுவளை காணப்படுகின்றது.

மேலும் கற்பூரவல்லியானது இருமல், தொண்டை வறட்சி போன்றவற்றை அழிப்பதற்கு உதவுகின்றதோடு முருங்கையானது மாதவிடாய் மற்றும் நீரிழிவிற்கான சிறந்த மருந்தாகும். இவ்வாறாக பல்வேறு மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாகவும் காணப்படுகின்றன.

இதய ஆரோக்கியத்தில் மூலிகைகளின் பங்கு

இன்று பல்வேறு இதய பிரச்சினைகளுக்கு காரணம் நாம் சிறந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமையே அந்த வகையில் நாம் உணவில் மஞ்சள், கொத்தமல்லி, ஏலக்காய், பூண்டு போன்ற சிறந்த மூலிகைகளை எடுத்துக் கொள்வதினூடாக இதயம் சீராக இயங்கும்.

இதய நோயே பக்கவாதத்திற்கான அடிப்படையாகும் என்ற வகையில் இதய நோயிலிருந்து எம்மை காத்து கொள்ள சிறந்த மூலிகைகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புற்று நோயை எதிர்த்தல்

புற்று நோயை எதிர்ப்பதற்கான சிறந்ததொரு மூலிகையே மஞ்சள் ஆகும். இதனுள் குர்குமின் என்ற கலவை காணப்படுகின்றது. இதுவே புற்று நோயை உண்டு பண்ணும் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

அதேபோன்று அஸ்வகாந்தா, துளசி, இஞ்சி, வேம்பு போன்றனவும் புற்று நோயிலிருந்து எம்மை பாதுகாக்கின்றது. எனவேதான் நாம் மூலிகைகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதனூடாகவே எம்மை நோயிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

முடிவுரை

சிறந்த முறையில் மூலிகைகளை நாம் எடுத்துக் கொள்கின்ற போதே நாம் ஆரோக்கியமாகவும் நோயில்லாமலும் வாழ முடியும். நாம் மூலிகைகளின் சக்தியை பெற்று எம்மை காவு கொள்ளும் நோய்களிலிருந்து எம்மை காத்துக் கொள்வோம்.

You May Also Like:

உணவே மருந்து கட்டுரை

ஆரோக்கியமான உணவு கட்டுரை